Admin Control Panel

New Post | Settings | Change Layout | Edit HTML | Moderate Comments | Sign Out

30.9.11

முடி ஆரோக்கியம்–Healthy Hair

    Lenthy Beauty
முடி ஆரோக்கியம் – Healthy Hair
 
முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.  அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு.  அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.
Curing Hairloss
முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
Conditioning
நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.
Hair Loss
 
 
முடி உதிர்வதை தடுக்க
Neem Leaves
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
Terminalia-Bellerica1-தான்றிக்காய்
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
Abrus precato குன்றிமணி
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
Natural Hair
நேர் வகிடு எடுக்கும் இடத்தில் முடிகொட்டினா சின்ன வெங்காயச் சாறு தடவி ஒரு பத்து பதினைந்து நிமிசம் வச்சிருந்து குளிச்சிருங்க... அந்த இடத்தில சீக்கிரம் முடி வளர்வதை நீங்க கண்கூட பாப்பீங்க. (கொஞ்ச நேரம் கண்மூடி உக்காந்துக்குங்க.. வேற என்ன பண்ண... முடி வளரனுமே)
No to Shampoo
முடி கொட்டாமல் இருக்க முந்தின நாள் இரவே வெந்தயம் தயிரில் ஊறவைச்சுடுங்க. மறுநாள் அதை அரைச்சு தலையில் ஒரு அரைமணிநேரம் பேக் போட்டு குளிங்க. சாம்பு வேண்டாம் வெந்தயப்பேக்கே போதும். முடியும் நல்லா பளபளப்பாக இருக்கும். முடியும் கொட்டாது வளரவும் செய்யும்.
Olive
அடர்த்தி கம்மியா இருக்கிற மாதிரி இருந்தா.... வெந்தயம் இரண்டு ஸ்பூன், முட்டையின் வெள்ளைக்கரு ஒன்று, ஒரு வாழைப்பழம் , ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலும் போடலாம் ... இவையனைத்தையும் போட்டு மிக்ஸியில் அடித்து அரை மணி நேரம் பேக் போட்டு தலைக்கழுவனால் போதும்.
கடைசி இரண்டு மக்கில் எலுமிச்சை சாறைப் பிழிந்து ஊற்றிக் கழுவனும். நார்மலா முட்டை வெள்ளைக்கரு ஸ்மெல் இருக்காது...ஆனாலும் ஸ்மெல் இருக்குமோன்ற சந்தேகத்திற்கு இந்த எலுமிச்சை தண்ணி. இந்த பேக் தலைமுடிக்கு நல்ல கண்டிசனர்,தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் எல்லாம் கிடைக்கும். நல்லா அடர்த்தியா முடி ஒன்னுமேல ஒன்னு ஒட்டாம அழகா இருக்கும்.
இந்த பேக் எல்லாம் போடறதுக்கு முன்னாடி நல்லா எண்ணெய் போட்டு கொஞ்ச நேரம் ஊற வைச்சிக்குங்க. நைட்டே போட்டு அடுத்த நாள் குளிச்சாலும் ஓகேதான். ஆனா கண்டிப்பா எண்ணை போட்டிருக்கனும்.
Oil Massage
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
சீதாப்பழ
சீதாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
 
 
வழுக்கையில் முடி வளர
Bald Head
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
 
 
இளநரை கருப்பாக
Grey Hair
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
 
 
முடி கருப்பாக
Black Hair
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
 
 
தலை முடி கருமை மினுமினுப்பு பெற
Shining Hair
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
 
 
செம்பட்டை முடி நிறம் மாற
Brown Hair
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
 
 
நரை போக்க
Hair Grey
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.
 
 
முடி வளர்வதற்கு
Hair Growth
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.
 
 
புழுவெட்டு மறைய
புழுவெட்டு
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


 குறிப்புHair Dryer
ஹேர் டிரையர் அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும்.
 
நன்றி.

28.9.11

போர்னோ வீடியோக்கள் – Porno Videos - 18+

செக்ஸ் -  போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!(18+) – Sex and porno videos.


Porn Devil
 
ஆரம்பத்துல வெறும் ஆசையா/ஆர்வமா ஆரம்பிக்கிற போர்னோ பழக்கம், காலப்போக்குல ஒரு போதைப்பழக்கமா, ஒருத்தர செக்ஸ் போதைக்கு அடிமையாக்கி, அவங்க வாழ்க்கையையே புரட்டிப்போடுற அளவுக்கு மோசமான நிலைக்கு இழுத்துக்கிட்டு போயிடுதாம்.
 
Porn slave

இந்த பிரச்சினைய, சில நிகழ்கால உதாரணங்களோட அலசியிருக்குற ஒரு  குறும்படம் நண்பர் மூலமா எனக்கு அறிமுகமாச்சு. அதைப்பற்றிய ஒரு சிறு முன்னுரையோட, அந்தக் காணொளிய உங்க பார்வைக்கும் எடுத்துக்கிட்டு வரவே இந்தப் பதிவு! வாங்க பார்ப்போம்….
 
Teens Hooked on Porn
 
இணைய செக்ஸ் போதைக்கு அடிமையான இருவர், போர்னோகிராஃபியை ஒரு ஆரோக்கியமான விஷயமாய்ப் பார்க்கும் ஒருவர் ஆகிய மூவரின் கதையும், செக்ஸ் போதைக்கு அடிமையான இருவருக்கும், அவர்களை நல்வழிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உளவியலாளர்களும், மருத்துவர்களும் கூறும் அறிவுரைகள் அடங்கிய ஒரு குறும்படம்தான்


Teens hooked on Porn

“இக்குறும்படத்தின் சில காட்சிகள், செக்ஸ் குறித்து இடம்பெறுவதால், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் பார்த்தால், தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இப்பதிவு உதவலாம்”
 
18
 
செக்ஸ் காணொளி/போர்னோகிராஃபியால் பாதிக்கப்பட்ட மூவரின் கதையாக வரும் இப்படத்தில், இன்றைய சூழலில் போர்னோகிராஃபி, இணைய உலகில் எந்த நிலையில் உள்ளது, அதன் விளைவுகள் என்ன, மீண்டு வர வழிகள் என்னென்ன, என பல கருத்துகளை அலசும் இப்படத்தின் அறிவுரைகளை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக்கொள்கிறேன்!
 
குறும்படம் முன்வைக்கும் கருத்துக்கள்!
 
  • போர்னோகிராஃபியானது, தனக்கு பிடித்த ஒரு பெண்ணை இணையத்தில் தேடுவதற்காக எனத் தொடங்கப்பட்டு, செக்ஸ் போதை/அடிமைத்தனத்தில் முடிகிறது!
  • பிரிட்டனைச் சேர்ந்த Darryl, (வயது 17) எனபவருக்கு போர்னோகிராஃபி ஒரு பிரச்சினையாக தெரியவில்லையாம்! (மக்கள் சிந்திக்க?!)
  • 16 வயதான Malcolm, மற்றும் 14 வயதான Colin என்ற இருவரும் போர்னோகிராஃபியால், தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகச் சொல்லி செக்ஸ் தெரபிஸ்ட் மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்!
  • பாதிக்கப்பட்ட இருவரின் பழக்க வழக்கங்களில், கோபம், ஆக்ரோஷம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவை போர்னோகிராஃபியால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்!
  • இப்பிரச்சினையில் பேற்றோர்களின் பங்கு என்ன, அதை எப்படிச் சமாளிப்பது என்று சொல்கிறது இக்குறும்படம்!
 
 
அறிவுரைகள்!
Advice
  • போர்னோகிராஃபி காணொளிகள், செக்ஸ் கல்வி காணொளிகள் அல்ல. அவை எல்லாமே இணையத்தில் சுலபமாக விலைபோகும் செக்ஸ் செயல்பாடுகளை, தேர்ந்த நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை/நாடகம் அல்லது இயக்கப்பட்ட ஒரு நிகழ்வே தவிர, உண்மையான/யதார்த்தமான செக்ஸ் செயல்பாடுகள் அல்ல!!
Dream porn
  • போர்னோகிராஃபியில் வரும் காணொளிகளும், நிஜ உலக செக்ஸ் வாழ்க்கையும் முற்றிலும் வேறானவை, இதில் சுகாதாரமின்மையும் இருப்பதை கவனித்தல் அவசியம்!
Cheat
  • நமக்குக் காண்பிக்கப்படாத/தெரியாத போர்னோகிராஃபி நிதர்சனங்கள் சில உண்டு. உதாரணமாக, போர்னோகிராஃபியால் ஏற்படும் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல தற்கொலைகள்!!
Suicide
  • போர்னோகிராஃபியானது செக்ஸ் வாழ்க்கையை உருக்குலைத்துவிடும், செக்ஸ் குறித்த முற்றிலும் தவறானதொரு புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க!!
mISs
  • செக்ஸ் செயல்பாடுகளை மட்டுமே சொல்லும் போர்னோ, அதன்பின் ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்களையோ, அதிர்ச்சிகரமான பல பின் விளைவுகளைப் பற்றியோ ஒருபோதும் சொல்வதில்லை!!
Pain
  • எல்லாவற்றிற்க்கும் மேலாக, நிஜ உலக உறவுகளை புறக்கணிக்கும் ஒரு மோசமான ஒரு நிலைக்குக் கூட ஒருவரை மாற்றக்கூடியது இந்தப் பாழாய்ப்போன போர்னோகிராஃபி!!
Break
இவை இப்படத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளாக எனக்குத் தோன்றியவை. மீதமுள்ளவற்றை நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்!!
 

 
நன்றி.


27.9.11

ஆட்டுகால் சூப்–Goat Leg Soup


Goat
ஆட்டுகால் சூப் – Goat Leg Soup

ஆட்டுகால் சூப்

தேவையான பொருட்கள்
  • ஆட்டுக்கால் - 1 செட்
  • சின்ன வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 1
  • மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
  • தேங்காய் முந்திரி பேஸ்ட் - அரை கப் (விரும்பினால்)

ஆட்டுக்கால்
ஆடுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும்.

கிளியர் சூப் செய்முறை


வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் சேர்த்து குக்கரில் வைத்து மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை முக்கால் மணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
அப்படியே மல்லி இலை தூவி பரிமாறினால் சூப்பர் சுவையுள்ள சத்தான கிளியர் சூப் ரெடி.
இதை உணவிற்கு முன்னர் ஸ்டார்ட்டர்(Starter) ஆக பரிமாறலாம்.


கெட்டி சூப் செய்முறை


அதனுடன் அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைத்து கட் செய்த மல்லி இலை சேர்க்கவும்.
எண்ணெயுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து சிவந்ததும் கால் ஸ்பூன் சில்லி பவுடர் சேர்த்து தாளித்து கொட்டினால் கெட்டி சூப் ரெடி.

குறிப்பு
இது பரோட்டா சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
குழந்தைகளுக்கென்றால் மிளகாய் இல்லாமல் மிளகின் அளவை குறைத்துக் கொள்ளவும். அல்லது மிளகு இல்லாமல் கடைசியாக மிளகு தூவி கொடுக்கலாம். அவர்களுக்கு கொடுக்கும் போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தும் கொடுக்கலாம்.
சளி இருமலுக்கு ஏற்ற மருந்து.

நன்றி.

26.9.11

மாதுளை–Pomegranate

Pome

மாதுளை – Pomegranate


 
அறிமுகம்
Pome Cut
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
Pome Tree
மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
Pome Pudding
மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.


வகைகள்
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
Pome Dwarf
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
Pome Rice
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.


சத்துக்கள்
மாதுளை 100 கிராம் பழத்தில் உள்ள சத்துக்கள் நீர் = 78% ,மாவுப்பொருள் = 15%, புரதம் = 1.7%, கொழுப்பு = 0.1%, கால்சியம் = 0.01%, பாஸ்பரஸ் = 0.07%, இரும்புத்தாது = 0.03 யூனிட், வைட்டமின் C = 16 யூனிட், வைட்டமின் B2 = 10 யூனிட்.
 Pome Nutri Chart


மருத்துவ பலன்கள்
தலைக்கு
புழுவெட்டு
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.


உடலுக்கு
Pome Powder
மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.
Pome Juice
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.


முகத்துக்கு
சந்தனம்
ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
Pome Water
ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.


தோலுக்கு
Pome Butter
மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
Pome seed
கற்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து கலந்து உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து சருமத்தை விட்டே விலகும்.


பருக்கள்
Pome freezed
மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
Pome Acne
ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் வராது.


இரத்தவிருத்திக்கு
Pome Pudd
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
Power of Pomegranate
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
Pome prls
மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.
Pome flower
மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.


இருமல்
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
Pome Smallமாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.


வாய்ப்புண்
Bird Pome
உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும்.


ஆண்க்களுக்கு
Pome pearls
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.


சீதபேதி
Pome Heart
சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
Pome Bud
மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.


மயக்கம்
Dizziness
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.


மூலம்
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
Pome Flowers
மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் தீரும்.


வயிற்றுக்கு
Pome Jelly
மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
Pome Olive Cake
புளிப்பு மாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
Pome Jam
மாதுளம்பூச் சாறு 2 தேக்கரண்டியுடன் கற்கண்டைப் பொடி செய்து காலை மாலை தொடர்ந்து உட்கொள்வதால் சூட்டினால் ஏற்படும் ஆசனக் கடுப்பு வயிற்றுக்கடுப்பு மலம் கழித்தபின் எரிச்சல் மூலம் ஆகியவை ஒழியும். பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்


பெண்களுக்கு
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
Pome Lady
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.


Pome Stitches
நன்றி.