பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் காய் என வழங்கப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரை கொண்டவை. இது பழத்தை உண்ண விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது.
பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது . 'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ' எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை